உத்தரப் பிரதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கனமழைக்கு 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தில், கடந்த 24 மணி நேரத்தில் கனமழையால் மேற்கூரை இடிந்து விழுந்தது, நீரில் மூழ்கியது, மின்னல் தாக்கியது உள்ளிட்ட விபத்துகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் மின்னல் தாக்கி மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அம்மாநிலத்தில் உள்ள 22 மாவட்டங்களில் சராசரியாக 40 மி.மீ அளவு மழை பதிவாகியுள்ளது.